Saturday, March 1, 2008

சாரிப்பா......

சென்னை என்றாலே ஒரு பரபரப்பு அதிலும் திங்கள் கிழமை என்றால் சொல்லவும் வேண்டாம்.இந்த பரபரப்பும் ஒரு அழகுதான். இதை படிக்கும் நண்பர்கள் அப்படி ஒண்ணும் இல்லைமானு சொன்னாலும் நான் மயிலை வாசியா இருக்கிற வரையுலும் இது சரிதான் என்று சொல்லுவேன் ஏன் என்றால் இருக்கின்ற இடம் சொர்க்கம் அல்லவா. என்னை வியக்க வைத்த ஒரு சிறிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சின்ன ஆசை......

வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல, மயிலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். அன்று ஏனோ வழக்கத்தையும் விட அதிக கூட்டம். இளையவர் முதல் முதியவர் வரை மனதாற 21G யை வாழ்த்தி கொண்டு இருந்தார்கள். வழக்கம்போல் நானும் அதில் சேர்ந்தேன் :)

அப்பொழுது ஒரு சின்ன பையன் அவன் அப்பாவுடன் (அவர்கள் சம்பாசனையில் தெரிந்தது) பைக்கில் வந்து நான் நிற்கும் இடத்தில் இறங்கினான். அவன் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்புதான் படிக்கலாம். அவன் முகத்தில் அப்படி ஒரு வருத்தம்.

அவன் அப்பா பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவன் அருகில் நின்றார். ஒரு ஆட்டோவை நிறுத்தி அடையாரில் உள்ள ஒரு பள்ளியின் பெயரை கூறி எவ்வளவு என்று கேட்டாரு. அந்த ஆட்டோ ஓட்டுனர் 100 ரூபாய்னு சொல்ல, அவர் தனது கைகடிகாரத்தையும் பார்த்து அந்த பையனையும் பார்த்தார்.

அவன் கண்ணிலோ இப்ப எட்டிப்பார்கட்டுமா என்று கண்ணீர் குளம்.... அவன் அழுதிருக்கலாம், ஆனால் மிடர் விழுங்கி கண்ணீர் வெளிவராது கட்டுப்படுத்தினான். அவன் அப்பாவோ, 100 ரூபாயை நீட்டி போய் இறங்கினவுடன் கொடுக்கணும்னு என்று சொன்னார். அவன் அதை வாங்காமல் தலையை மட்டும் மறுத்து ஆட்டினான். கடந்த பத்து நிமிடங்களில், முதல் முறையாக அவன் வாய் திறந்து "சாரிப்பா இவங்க (பொதுவாக அந்த குட்டி கை எல்லோரையும் காட்டியது) போகிற பஸ்சில் ஏற்றி விடுங்க நான் ஸ்கூலுக்கு போய்டுவேன் என்று அழுகையை கட்டுப்படுத்தி சொன்னான். இந்த வயதில் இவனுக்கு இவ்வளவு தன்மானமானு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவன் முதுகில் செல்லமாக தட்டினேன்.என்னை பார்த்து அந்த பூ சிரிச்சது.

அவன் அப்பா அவனை அன்பொழுக உற்று பார்த்தார். இதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல் இரண்டு துளி கண்ணீர் எட்டி பாத்துச்சு. தனது கை குட்டையால் அவனது கண்ணை மெல்ல துடைத்தார். இதில் இருந்து என்ன கத்துகிட்டனு கேட்டார் ???? அவன் பட்ட என்று "இனிமேல் சீக்கிரம் கிளம்பிடுவேன்பா, ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ண மட்டேன்பானு சொன்னான்".

அவன் மறுபடியும் சாரிப்பானு சொன்னான். அவர் அவன் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவன் ஷர்ட் பாக்கெட்டில் 100 ரூபாயை வைத்து ஆடோல ஏறு உனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுதுனு சொன்னார். அவனும் ஆடோல ஏறி கொண்டு , அவங்க அப்பாக்கு டாடா காண்பித்தான், எனக்கும் காண்பித்தான். அந்த ஆட்டோ போனவுடன் அவரும் தனது பைக்கில் பறந்தார். எனக்கு அப்பஎங்கோ படித்த ஒற்றை வரி ஞாபகம் வந்தது. " உன் மகனுக்கு நீ பரிசளிக்க விரும்பினால் நல்நடத்தையை பரிசளி". அந்த தந்தை அவனுக்கு பரிசளித்துவிட்டார். ஒரு வழியாக "உனக்காக வருகிறேன் எனக்காக காத்திரு" என்று சொல்லாமல் சொல்லும் 21G யும் வந்தது, நானும் ஏறிகொண்டேன்.

அடுத்து வேலையை பற்றி சிந்தித்தாலும், எனக்கு அந்த நிகழ்வானது வரும் தலைமுறையும் சுய மரியாதையுடனும் பாசவுணர்வுடன் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.இது என்னுடய் கருத்து அல்லது கண்ணோட்டமாகும். தமிழ் அங்கங்கு தத்தி இருக்கலாம் ஆகையால் குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்.

10 comments:

Anonymous said...

Superb.........

Anonymous said...

First is the best...
continue this blogging...
best of luck..

by
Anbu.

Revathy said...

very good... i except more.... more..... from u.... keep it up...

Anonymous said...

Agalya Kalakara Poo...
Yepadi Ipadi Yellam...

Very Nice...

Anonymous said...

I am not the right person on giving comments..

i think really u r enjoying, what you are..
keep on enjoying:-) ...

All the best..
nice..

Anonymous said...

Great post dear.. Keep rocking.. We are expecting more from u...

Anonymous said...

Agalya,

You are digging out my painful memories....

i dnt knw whether to thank u or to scold u for bringing tears with my eyes.....


any way thnks...

Anonymous said...

agalya nice nice one keep it up............. raju

Anonymous said...

Enaku aluga alugaliya varuthu..

Cheers
Aras..

Thomas said...

oh wow the story is brilliant..
I want to meet agalya..
I welcome agalya to our publication to write small stories...plz post her contact no...